Tuesday, August 30, 2011

பெருநாள் வாழ்த்துக்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோதர சகோதரிகள் அனைவருக்கும்

என்னுடைய இதயம் கனிந்த நெஞ்சார்ந்த 

பெருநாள் வாழ்த்துக்கள்...



Monday, August 15, 2011

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!


செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!
“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)
கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன்!
“செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 102:1-8)
பொருட் செல்வமும், மக்கள் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்!
“செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன” (அல்-குர்ஆன் 18:46)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!
அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)
இவ்வுலகில் செல்வங்கள் தரப்பட்டிருப்பது ஒரு சோதனைக்காதத் தான்!
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 8:28)
அல்லாஹ் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்!
“அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்” (அல்-குர்ஆன் 16:71)
செல்வமும் வறுமையும் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவை!
“நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் – எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 34:36)
அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வ செழிப்பைக் கொண்டு ஆணவம் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் காரூனுக்கு வழங்கிய செல்வத்திலிருந்தும், தண்டனையிலிருந்தும் படிப்பினை பெறுங்கள்!
“நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ‘நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்’ என்று கூறினார்கள். ‘மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை’ (என்றும் கூறினார்கள்). (அதற்கு அவன்) கூறினான்: ‘எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!’ இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: ‘ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்’ என்று கூறினார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களோ; ‘உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள். ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், ‘ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள்” (அல்-குர்ஆன் 28:76-82)
செல்வ செழிப்புள்ளவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்!
“இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்” (அல்-குர்ஆன் 9:85)
நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வத்தைக் கண்டு அதைப் போல் அடைய வேண்டும் என ஆசைக் கொள்ளாதீர்கள்!
“நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்” (அல்-குர்ஆன் 43:33)
உங்களின் பிள்ளைகளும், செல்வங்களும் இறைவனை மறக்கச் செய்ய வேண்டாம்!
“ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்” (அல்-குர்ஆன் 63:9)
இவ்வுலகின் செல்வம், செல்வாக்கு மற்றும் அதிகாரங்கள் யாவும் அழிந்து விடக் கூடியவைகள்!
“ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: ‘என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! ‘அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ‘(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ‘என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ‘என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!’ (என்று அரற்றுவான்)” (அல்-குர்ஆன் 69:25-29)
நிலையற்ற இவ்வுலக செல்வத்தின் மீது காதல் கொண்டுள்ள மனிதன்!
“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)” (அல்-குர்ஆன் 104:1-9)
மறுமையில் பயனளிக்காத இவ்வுலக செல்வங்கள்!
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா” (அல்-குர்ஆன் 26:88)
இம்மையின் செல்வ சுகங்களில் மூழ்கிக் கிடந்தவர்களின் செயல்கள் யாவும் அழிந்து விடும்!
“(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள்தான் நஷ்டவாளிகள்” (அல்-குர்ஆன் 9:69)
நரகத்தில் விழுந்து விட்டால் நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எவ்விதப் பயனும் அளிக்காது!
“ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது” (அல்-குர்ஆன் 92:11)
இறைவனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் ஆற்றல் செல்வத்திற்கு இல்லை! மாறாக ஒருவரின் நற்கருமங்களே இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும்!
“இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்” (அல்-குர்ஆன் 34:37)
கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் அல்லாஹ் இரு மடங்கு கூலி தருவான்!
“(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் – அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 2:245)
தான தர்மங்கள் செய்வதினால் வறுமை உண்டாகாது! மாறாக செல்வம் பெருகும்!
“(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:268)
ஒவ்வொரு முறை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போதும் 1x7x100=700 மடங்கு நன்மைகள் கிடைக்கும்!
“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:261)
செய்த தர்மங்களை சொல்லிக்காட்டாதிருந்தால் நற்கூலிகள் கிடைக்கும்!
“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:262)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்!
“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம்
பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:265)
அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள்!
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்” (அல்-குர்ஆன் 2:273)
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்!
“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:92)
பணக்காரர்களுக்கிடையில் செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது!
“அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்” (அல்-குர்ஆன் 59:7)
தான தர்மங்கள் செய்வதினால் உள்ளும் புறமும் தூய்மையடையும்!
“(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை
அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 9:103)
பயபக்தியுடையவர்களின் செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு!
“நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்¢ நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு” (அல்-குர்ஆன் 51:15-19)
எல்லா செல்வங்களை விட மிக்க மேலான செல்வம் அல்-குர்ஆன்!
“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 10:57-58)
உண்மையான முஃமின்கள் யார்?
“நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் – இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்” (அல்-குர்ஆன் 49:15)
பொன்னையும் பொருளையும் சேகரித்து வைத்துக் கொண்டு தான தர்மம் செய்யாதிருப்பவருக்கான தண்டணைகள்!
“எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 9:34-35)

Saturday, August 13, 2011

அருட்கொடையாம் தொழுகை.

தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை
உங்களுக்கே.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான். 

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


CLICK AND READ.

>>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

>>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


>>> முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ? <<<

>>> க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்? <<<


வாஞ்சையுடன் வாஞ்சூர்.

Thursday, August 11, 2011

இறைவனின் கட்டளை


ஜகாத் கொடுப்பது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதாகும்!
“இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:110)
Top
தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்! இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்! அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்! நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்! அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்” (அல்-குர்ஆன் 73:20)
ஜக்காத் கொடுத்தால் இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது!
“யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:277)
மறுமையை நம்பாதவர்களே ஜக்காத் கொடுக்க மாட்டார்கள்!
” இணை வைப்போருக்குக் கேடுதான்’ என்று (நபியே!) நீர் கூறும். அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்! மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!”(அல்-குர்ஆன் 41:7)
மறுமையை உறுதியாக நம்புபவர் தான் ஜக்காத் கொடுப்பார்கள்!
“(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்! இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்! அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்” (அல்-குர்ஆன் 27:3)
“அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்! ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்! இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்” (அல்-குர்ஆன் 31:4)
ஜக்காத் கொடுப்பவர்கள் தான் மார்க்கத்தில் சகோதரர்கள் ஆவார்கள்!
“ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்” (அல்-குர்ஆன் 9:11)
தங்கம் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவர்களுக்கான தண்டணைகள்!
” எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 9:35)
கழுத்தில் போடப்படும் அரிகண்டம்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்” இதைக் கூறிவிட்டு,
‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
ஜக்காத் கொடுப்பவர்கள் கல்வியில் உறுதியுடையோரும், இறை நம்பிக்கையுடையோரும் ஆவார்கள்!
“எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்! இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்” (அல்-குர்ஆன் 4:162)
ஜக்காத் கொடுப்பவர்களே மஸ்ஜிதுகளை நிர்வகிக்க தகுதியுடையோராவார்கள்!
“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்” (அல்-குர்ஆன் 9:18)
ஜக்காத் கொடுத்தால் கிருபை செய்யப்படுவீர்கள்!
“(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்! மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்” (அல்-குர்ஆன் 24:56)
அல்லாஹ்விடத்தில் பெருகும் செல்வம்!
“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்-குர்ஆன் 30:39)
ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?
“(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்” (அல்-குர்ஆன் 9:60 )

இரகசியமாக.............


வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது!
“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:271)
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்!
நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:
1) நீதிமிக்க அரசன்.
2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
4) அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்,
5) அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்’ எனக் கூறியவன்.
6) தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்,
7) தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”  அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி
செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவதால் நன்மைகள் பாழாகிவிடும்!
அல்லாஹ் கூறுகிறான்:
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)
சொர்க்கம் நுழையாத மூவர்!
“சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயி, திர்மிதி)
மேற்கண்டவைகளிலிருந்து பெறும் படிப்பினைகள்:
  1. தான தர்மங்களை வெளிப்படையாக செய்தாலும் நல்லது! ஆனால் மறைத்து செய்வது அதை விடச் சிறந்தது
  2. வலகு கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக தர்மம் செய்தால் மஹ்ஷரில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்.
  3. செய்த தர்மத்தை அல்லது உதவியை சொல்லிக்காட்டி நிந்தனை செய்தால் நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும்.

ஜகாத் என்னும் தானங்கள்

ஜகாத் என்னும் தானங்கள்

1) தரித்திரர்களுக்கும்
2) ஏழைகளுக்கும்
3) தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்
4) இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுபவர்களும்
5) அடிமைகளை விடுதலை செய்வதற்கும்
6) கடன்பட்டிருப்பவர்களுக்கும்
7) அல்லாஹ்வின் பாதையில்(போர் புரிவோருக்கும்)
8) வழிப்போக்கர்களுக்கும் உரியது...

அத் தவ்பா ;60

ஜகாத் - ஒரு சமூக பாதுகாப்புத் திட்டம்



பெரிதுபடுத்திப் பார்க்க - அதன் மேல் கிளிக்கவும் 

Monday, August 8, 2011

நோன்பும்,சில சுவாரஸ்ய நினைவுகளும்!!!படித்ததில் பிடித்தது ....


அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச்சகோதர சகோதரிகளே! இனிய ரமலானை களிப்புடன் கழித்துக்கொண்டிருக்கும் நம் அனைவரின்  மீதும்,மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இந்த இனிய ரமலானில்,நோன்பு குறித்த எனது அனுபவங்களையும்,எனது ஊர் பழக்கங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்.இது என்னை அன்புடன் தொடர்பதிவுக்கு அழைத்து,நான் எழுதாததால்,உரிமையுடன் கோபித்துக்கொண்ட எனதருமை சகோதரியையும் திருப்திபடுத்துமாயிருக்கும்..இன்ஷா அல்லாஹ்.

முதலில் ஊர்.அடியேன் ”இராம்நாட் அல்ல,இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் எனும் ஊரை சொந்த ஊராகக் கொண்டவன்.முஸ்லிம்கள் அதிகம்.அதே அளவு ஹிந்து சகோதரர்களும் இருக்கிறார்கள்..

எங்க ஊர் நான்கு பள்ளிகளை தன்னகத்தே கொண்டது..ஊர் பெரிய பள்ளிவாசல்,எனக்கு தெரிந்து சுற்றுவட்டாரத்தில் இத்தனை பெரிய இரட்டை மனரா(Tower??) உள்ள பள்ளி இதுவாகத்தான் இருக்கும்.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னே கட்டப்பட்டது.அடுத்து ஊரணிப்பள்ளி,இது ஊரில் உள்ள ஊரணிக்கரையோரம் இருப்பதால் அதுவே பெயர்காரணம் ஆனது.அடுத்தது கீழப்பள்ளி(எங்க ஜமாத்),இது ஊரின் கிழக்கு திசையில் இருப்பதால் இதுவும் காரணப்பெயர் தான்.அடுத்தது வடக்குப்பள்ளி.ஸேம்.வடக்கு திசையில் இருப்பதால் வந்த பெயர் அது..


அடுத்தது நோன்பு.நோன்பு என்றாலே முதலில் நியாபகம் வருவது நோன்பு கஞ்சிதான்..அது எங்க ஊரில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு டேஸ்ட்.பெரிய பள்ளி கஞ்சி கொஞ்சம் காரம் ஜாஸ்தியா இருக்கும்.ஊரணிப்பள்ளி கஞ்சி எனக்கு ரொம்ப பிடித்தது.எங்க காலத்தில் மைதுவா என்ற பெரியவர்தான் காச்சுவார். கீழப்பள்ளி கஞ்சியும் அருமைதான்.இங்குதான் அதிகம் நோன்பு திறந்தது.

பெரியபள்ளி மனராவில் சுற்றிலும் கலர் பல்புகள் எப்போதும் பொருத்தி இருக்கும்.விஷேச நாட்களில்,குறிப்பாக பெருநாள்,தலைநோன்பு, இவற்றுக்கெல்லாம் அதை எரியவிடுவார்கள். நான் சிறுவயதில் நோன்புக்கு பிறை பார்ப்பதை விட அந்த லைட் போட்டாச்சான்னுதான் பார்ப்பேன்..பிறை பாத்துட்டா லைட் போட்ருவாக...

லைட் எரிஞ்சுட்டாலே,ரோட்ல இருந்து ஆட்டம் போட்டுகிட்டே வீட்டுக்கு வந்து,அம்மா நோன்பு வந்துடுச்சுன்னு சொல்ரது.

நோன்பு காலமெல்லாம் ஒரே சந்தோஷம் தான்.என்னவொ தெரியாது..ஊரும் ஜகஜோதியா இருக்கும்,நோன்பு பெருநாளுக்கு பிரத்தியேகமா ஊர்வரும் மக்கள்,இன்னும் ஊர் மக்கள் கூட்டம் கூடினமாதிரி இருக்கும்.
ஸ்கூல் உட்டு வந்தவொடன (d)டேப்(அதாவது தூக்குவாளி,எங்க ஊர்ல இதுக்கு இப்டிதா பேரு..ஏ எதுக்குனெல்லா தெரியாது.) ரெடியா கழுவி இருக்கும்.எடுத்துக்கிட்டு அஸர்(மாலை தொழுகை) தொழுக போய்ட்டு.வரும்போது வீட்டுக்கு கஞ்சி வாங்கிட்டு வர்ரது.அப்ரம் கொஞ்சம் வேலை சஹர்(முன்இரவு நோன்பு சாப்பாடு) ஏற்பாட்டுக்கு..நோன்பில் பிரத்தியேகமாக சாயங்காலம் ஃப்ரஷ்(புதியJ) மீன் வரும்..அப்ரம் நோன்பு திறக்க பஜ்ஜி (a banana slice, coated with flour, and immediately jumps in to hot oil, then fully fried, is called Bajji ;), வடை,...அப்ரம் குளியல்..இது மத்த ஊர்ல எப்டின்னு தெரியல..பட் பசங்க எங்க ஊர்ல சாயங்கால குளியல்தான்..அதும் ஆண்களுக்கு குளியல் எப்போமே பள்ளிலதான்.. இல்ல ஊரணில...வீட்டுக்குளியல் கொஞ்சம் ரேர்தான்..சோ எல்ல ஃப்ரண்ட்ஸும் சொல்லிவச்சு ஒன்னா போய் ஜாலியா குளிச்சுட்டு வந்துடுவோம்..

பின் மஃரிப்க்கு ஒரு அரைமணி நேரம் முன்னதாக நோன்பு திறக்க கெலம்பீர்ரது..நான் நோன்பு திறந்த அனுபவத்த ஊர் வழக்கப்படி மூனு காலகட்டமா பிரிக்கலாம்.

அதாவது.முதல் காலகட்டம் சிறுவயது.அப்போல்லாம் பள்ளிக்கு நோன்பு திறக்கன்னு சொல்லி கெலம்பும் போது அப்போல்லா எனாமல் பாத்திரம் ஃபேமஸ்,ஸோ ஒரு எனாமல் ஸ்பூன் நல்ல டிஸைன்ல எடுத்துக்கிட்டு.பேப்பர்ல பேரீச்சம்பழம், கொஞ்சம் அதே (d)டேப். மினி ஸைஸ்’ல சர்பத் கரைத்து அம்மா தருவாக...சில நாள் அதும் தரமாட்டாக..because me return வரும்போது டேப் மிஸ் ஆயிடும்..ஸோ,...போ.. பொயி நோன்பு தொரந்துட்டு வந்து இங்க எல்லா சாப்டுக்கோன்னு அனுப்பிருவாக..ஸ்பூன்ல கொஞ்சம் ஊருகாய் வேர சைட் டிஷ்...இன்னும் பொம்புள புள்ளைகள்லா,கிண்ணத்துல மீன் ஆனம்(குழம்பு) சுண்டவைத்து பேஸ்ட் மாதிரி ஆக்கி கொண்டு வருவாக..நாம கௌரவ கொரச்சல் காரணமா அதையெல்லா எடுக்கிறதில்ல.பட் பள்ளிக்குள்ள போயி கொஞ்சம் வாங்கிக்கிறது..

இப்போ பள்ளிக்குள்ள போனவொடன,கைல உள்ளதைலா ஒரு எடத்துல வைச்சுட்டு கொஞ்சநேரம் விளையாடுரது...கஞ்சி சட்டிக்கிட்ட போயிட்டா,அங்க இருந்து ஒரு சத்தம் வரும்..காரணம் நெருப்பு சரியா அணைக்காம இருக்கும்..ஸோ,குளிக்கிற ஏரியாவுக்கு போய் ஆட்டம் போட்ரது..அப்ரம் ஆள் எல்லா வர ஆரம்புச்ச ஒடன ஒரு லைன் ஃபாமாகும்.. அதாவது கலக்கம்புல (ஓட்டு போடுர க்யூ மாதிர்) ஆண்கள் பெண்கள்,அதாவது நாங்கதா நண்டு நசுக்கெல்லா அதுலதா போய் நிக்கனும்..ஒன்வேதா.இப்டி போகும்போதுதா,ஒருத்தர் ஒருத்தர் பிரியமா விசாரிச்சுப்போம்,ஸைட் டிஷ்க்காக..

அங்க போன அண்ணன்மார்கள் சின்ன பசங்களுக்கு தட்டுலதான் கஞ்சி ஊத்தி கொடுப்பாக... இந்த தட்டு மேட்டர சமாளிக்கத்தா அந்த ஸ்பூன்..அப்டியே குடிக்க முடியாதுல்ல...பொம்புள புள்ளைக இந்த தட்டு ஸ்டேஜ் வரைக்கும்தா..பள்ளிக்கு வருவாக/...அப்ரம் பாவம்..யாரு?? நாங்கதா...வேரெதுக்கு?? then நோ ஸைட் டிஷ்!!!...

அப்ரம் இரண்டாம் காலகட்டம் கொஞ்சம் வளர வளர..தட்டை நம்ம கெவுரவத்த கொஞ்சம் டேமேஜ் பண்ணும்..அதனால அண்ணம்மார கொஞ்சம் கரெக்ட் பண்ணி,கோப்பை வாங்க ட்ரை பண்ரது..சில நேரம் கிடைக்கும்,கிடைக்காது...பெரியவங்களுக்கு இல்லாம போயிரும்ப்பா,அப்டீன்னு காரணம் சொல்லிருவாக...பெருந்தன்மையோட சரிங்ண்ணா அப்டீன்னு வந்துர்ரது...(வேர வழி??)

அப்ரம் கொஞ்சம் வளந்ததுக்கப்பரம்,ரெகுலர் கோப்பைக்காரராயிரது..ஸ்பூன தூக்கி கடாசிட்டு அதே (d)டேப் மினி ஸைஸ்’ல சர்பத்.ஒரே சமயத்துல ரஸ்னா,டேங்,லெமன் ஜூஸ்,நன்னாரி சர்பத்,ரோஸ்மில்க்,அப்ரம் ஆளாலுக்கு ஒன்னு ரெண்டு பஜ்ஜி,இப்டி கொண்டுவந்து எல்லாத்தையும் ஒன்னா போட்டு ஷேர் பண்ணி சாப்டுவோம்.இதுல சுண்டல்,இருந்தா இன்னும் ஸ்பெஷல்..எல்லாத்தையும் கஞ்சில போட்டு குடிக்கும்போது சேத்து சாப்பிட்ட இன்னும் நல்லா இருக்கும்...

அடுத்த ஸ்டேஜ்,அண்ணன்மார் ஸ்டேஜ்..நாமதா பொருப்பாளி???.ஸீனியர்ஸ் எல்லா வேலை அது இதுன்னு கெலம்பீருவாக...இது “பாரம்பரியமா கெடைக்கிற மருவாத” (பரிவட்டம் கட்ர மாதிரி???)அப்பல்லா ஆல் இன் ஆல் நாமதா..நம்ம பசங்கல்லா சேந்து இந்த வேலைய பாக்குறது..(வீட்டு வேலைய விட்ருவோம்,அதுவேர விஷயம்..) but பொதுவாழ்க்கைன்னு வந்துட்டாலே இதெல்ல சகஜம்தேன..

ஊரணி + பள்ளி
அஸர் தொழுக வந்ததோட,மக்களுக்கு நோன்பு கஞ்சி வினியோகம்,அப்ரம் நோன்பு திறக்க வரும் மக்களுக்கு கோப்பைல கஞ்சி ஏற்பாடு பண்ரது.இந்த கோப்பை கஞ்சியோட பருப்பு துவையல் செய்வாங்க..அதை கோப்பையின் விளிம்பில் ஆறுவிரல் அளவுக்கு வைத்துவிடுவோம்..தட்டுல வெறும் ரெண்டு விரல் அளவுதான்.துவையல் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்...அப்ரம் வர்ர வட,பஜ்ஜி,ஐட்டங்கள பிரிச்சு எல்லாருக்கும் கொடுக்குறதுன்னு படுபிஸி,கொஞ்சம் பெரிய மனுஷத்தனம் வந்துரும்,பள்ளி வேலையெல்லா பாக்குறோம்ல...
வெளியூர்கள்ல இருக்கிறமாதிரி..பள்ளிலையே நோன்பு திறக்கிரதில்லை..பள்ளியின் பின்புறம் தான் கஞ்சி தயாராகும்.அங்கு பெரிய இடம் இருக்கும் எல்லா பள்ளிலையுமே.. அங்குதான் நோன்பு திறப்போம்..அப்ரம் எங்க செட்’க்கு மட்டும் அங்க இருக்குர உள் வரண்டாவுல அனுமதி...

இதும் இல்லாம என்னோட முதல் காலகட்டத்துல நோன்பு திறந்து மஃரிப்(after sunset prayer) முடிஞ்ச ஒடன..வீட்டுக்கு ஓடி,வெர எதுனாச்சும் சாப்டுட்டு அப்டியே கெளம்பீர்வோம்.. எங்க...பைத் எனும் ஊர்வளத்துக்கு தான்..ஏரியா பசங்க எல்லா ஒன்னா சேந்து,ஒரு ரெண்டு ரெண்டு பேரா நாலு இல்ல அஞ்சு ரோ வர்ர மாதிரி பைத் அரேஞ்சு பண்ணி அப்டியே ஊருக்குள்ள ஒரு ரவுண்டு வர்ரது...

இதுல பாட்டுவேர...பின்ன பைத்துன்னா பாட்டு இல்லாமையா???
“நோன்பான நோன்பின் நாளில்....
நோன்பினை நோற்கவே...,நன்மைகள் சேர்க்கவே...
ரமலானிலே....புனிதஅஅஅ ரமலானிலெ......
லைலத்துல் கதிர் என்ற புனிதமிக்க ஒளிமிக்க நன்நாளில்
இம்மாதத்தை படைத்திட்ட இறையை நாம் ஏற்றி புகழ்ந்திடுவோம்....
(இந்த லைன் ஹைபிச்;ல இருக்கும்,இதுக்கப்பரம் எல்லா லைன்னுமே ஹைபிச்தான்.. ஏன்னுலா தெரியாது..பாரம்பரியம்...அப்டி புடிச்சுட்டு வந்துட்டோம்)
Conti..
இஸ்ஸுலாத்தின் கடமைகள் ஐந்து,அதை
ஒழுங்காக நிறைவேற்றி...இறையோனை தொழுதேற்றி
வாழ்ந்திடுவோம்,..நன்மைஇஇஇஇ சேர்த்திடுவோம்ம்.
நோன்பான நோன்பின் நாளில் Repeattu…”

இதுக்கெடையில ஒரு  உண்டியல் ரெடி பண்ணி ஒருத்தன் கைல கொடுத்துர்ரது...பைத் மூவ் ஆக ஆக அவன் அப்டியே ஒரு கலெஷன் போட்டுட்டே வருவான்...அப்ரம் அத பொதுக் காரியங்களுக்கு செலவு பண்ரது(அப்டியே பண்ணிட்டாலும்!)...என்ன பொல்லாத பொது காரியம்...அந்த வயசுல பரோட்டா கடைலைலா போய் உக்காந்து சாப்டதே இல்லை... பைத் உறுப்பினர்கள் எல்லா பொதுக்குழுவ கூட்டி,எந்த கடைல பரோட்டா சால்னா ஸ்பெஷல்ன்னு முடிவு பண்ணி,அந்த கனவ நெரவேத்திப்போம்..

அப்ரம் தராவீஹ்..வீட்ல சொல்லிட்டு இஷாவுக்கு முன்னாடியே கெலம்பீர்வோம்..அம்மாவேர பெண்கள் மதரஸாவுக்கு தொழுக போயிருவாங்களா..நமக்கு ஜாலிதான்..போகவேண்டியது இஷா(இரவுத் தொழுகை) அட்டன் பண்ணிட்டு,எஸ்கேப்பு..வெளியா பூரா பசங்கதா,,,ஊர்பூரா ஓடி விளையாட்டுதான்..
இந்த இருட்டுல ஒளிஞ்சு விளையாடுரது சூப்பரா இருக்கும்,,பசங்க இருக்குர தைரியத்துல பகல்லையே போக பயப்புடுர பாழடஞ்ச வீட்டுலைலா ஒளிஞ்சு விளையாடுவோம்...ஜாலியா விளையாடும்போதே எங்கள்ல ஒருத்தன் கண்ணும் கருத்துமா..பள்ளிய நோட்டம் விட்டுக்கிட்டே இருப்பான். இருவதாவது ரக்காயத்(கடைசித் தொழுகை) வந்த ஒடன எல்லாம் போய்..பள்ளி ஹவுஸ்’ல(சிறிய நீர் தொட்டி)..சலசலன்னு ஒளூ(wash) செஞ்சுட்டு ஜாயின் பண்ணிப்போம்...தொழுகை முடிஞ்ச ஒடன தப்ரூக்(அன்பளிப்பு) ஏதாவது.. பரிமாறுவாங்க.. நீங்க நெனைக்கலாம்,அடச்சே அல்ப்பம்!!..போயும் போயும் இதுக்காகவா? அப்டீன்னு.. அதுதா இல்லை..இந்த தப்ரூக்கோட வீட்டுக்கு போனாத்தா பயபுள்ள கரெக்ட்டா  தொழுதுட்டு வந்துருக்குன்னு அம்மா நம்புவாக...அதுக்கு தா இந்த ஏற்பாடு...அப்ரம் ஒரு ஸ்டேஜ்ல.. கரெக்ட்டா தொழுக ஆரம்பிச்சாச்சு...ஹஸ்ரத்,டே ஹமீது மயனே..இங்கவா...என்ன நேத்து ஆளக்காணோம்ன்னு நம்மலைல்லா மதிச்சு விசாரிகிர அளவுக்கு கரெக்டா தொழுதோம்ல...(நல்லவனாக்கும்...ம்ம்)

அப்ரம் நோன்புன்னாலே,நம்ம அண்ணன்மார் எல்லாம் சேந்து ஒரு வீட்டோட திண்ணைல மைக் செட் குழாய்,ஸ்பீக்கர் சகிதம் ரெடியாயிருவாங்க..ஸகர் நேரம் சொல்ரதுக்கு... கண்ட்டினுஅஸ்ஸா ஹனிபா பாட்டு ஓடும்..ஒவ்வொரு ஒருமணி நேர இடைவெளியிலும்”””” மைக்க தட்டி,இப்பொழுது நேரம் சரியாக!!! பண்ணண்டு மணி,ஸகர் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.அப்டீன்னு வார்ன் பண்ணிட்டு, பாட்ட தட்டி உட்டுட்டு சீட்டு விளையாட ஆரம்ச்சுருவாக..
இதுக்கெல்லா நமக்கு நாட் அள்ளவ்டு..அவ்வங்கெலோட போய் நாய் மாரி ஊரசுத்திட்டு நடு சாமத்துல வந்து கதவ தட்டுரது...அதுக்கு பெசாம குரான எடுத்து ஒக்காந்து ஓது,நோம்பான நாள்ல நன்மை,இல்ல பெசாம தூங்கு...(இது அம்மா...).ஓக்கே...அதுக்கு மேல பேச முடியாது..

ஆனா ஒரே ஒருநாள் அதையும் கெஞ்சி கேட்டு அட்டன் பண்ணுனேன்..செம ஜாலி,,,..அப்ரம் ப்ச்...இல்ல...நோன்பின் மாண்பு தெரியாமல் விளையாட்டாய் கழிந்த காலம் பள்ளிப் பருவத்துடன் முற்றுப்பெற்றது.அதன் பின் மார்க்கக் கடமைகளின் முக்கியத்துவமும், அருமையும் தெரியவர,நோன்புகால விளையாட்டுக்களெல்லாம் வினையாய் முடியும் என உணர்ந்து,அவற்றை கைவிட்டது வேறு விஷயம்.

அப்டீ நோன்பு ஓடி பெருநாள் வந்துரும்..பெருநாள் காலைல...ஷாம்பு’லா இல்லை... பலமணகப்பி,அப்டீன்னு ஒரு பவ்டர்,சிககாய்,கஸ்தூரி மஞ்சள் வேர என்னன்னமோ போட்டு ஒரு வீட்ல செஞ்சு விப்பாக,ஒரு பாக்கெட் ரெண்டு ரூவான்னு...அது ஆளுக்கு ஒன்னு.. அம்மாக்கு ரெண்டு...

அதை தலை மற்றும் உடம்புக்கு தேய்த்து குளிக்கனும்..நிய்யத்துதா(எண்ணம்) மறந்துரும்ன்னு,சொல்லிட்டே போரது..கடைசில மறந்துரும்L.. அன்னைக்கும் பள்ளிலதா குளியல்ஸ்.அப்ரம் புது ட்ரெஸ்,ஊரணிப்பள்ளில இருந்து பெரிய பள்ளிக்கு பைத் போகும்(இது பெரியவங்க பைத்,நம்ம ஐட்டம் இல்ல), அதுல ஜாயின்பண்ணி கடைசி ரோல பசங்கலோட பேசிக்கிட்டே பள்ளிக்கு போய்ட்டு... தொழுகை.. அப்ரம் வெளிய வந்து எத்ன மணிக்கு மீட்டிங் எல்லா பேசிவச்சுட்டு,வீட்டுக்கு போய்,அப்ரம் சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லா ஒரு ரவுண்டு...பெரியத்தா சின்னத்தா,மாமி,அப்டீன்னு எல்லா பெருநாள் காஸ் தருவாங்க..ஒரு கலெக்‌ஷன போட்டுட்டு வந்துருவோம்..அப்ரம்..ஊர் பேட்டைல  ராட்னம் போட்டுருப்பாக...ஒரு ரெண்டு மூனு தடவ தலைராட்டினம்,கொடைராட்னம் ஆடிட்டு, அப்டீ போய்,இஸ்டத்துக்கு ஐஸ் வாங்கி திங்கிறது...அப்ரம்..வேரொன்னு செய்யாம காஸ வீட்டுக்கே கொண்டு வந்துருவேன்..அப்போல்லா செலவு பண்ண தெரியாது :)

இப்டியே பெருநாள் ஓடினஒடன...அடுத்த நாள் டல்லாயிடும்....அடுத்த நோன்பு எப்போன்னு.. ஆசையோட..நாள் ஓட ஆரம்பிக்கும்.

ஹ்ம்ம்,,,இதெல்லா எழுதும்போதே அப்டி மனக்கண்ல எல்லா காட்சியும் ஓடி மறையுது... அர்ப்புதமான அனுபவம்...மறக்க முடியாது,,.

காலம் மாற காட்சியும் மாறி..இன்றைய நோன்பு அமீரகத்தில்....

ப்ளைன் கஞ்சி

மட்டன் கஞ்சி
இங்க,உறவுகளை பிரிந்து,....நம்ம கடல்கடந்த நட்புகளோடு,,நோன்பு நல்லாவே போகுது.. நம்மஜலீலாக்கா,அவங்கள மறக்க முடியாது...அவங்களோட நோன்பு கஞ்சி சமயல் குறிப்பு தயவுல..சூப்பரா நோன்பு கஞ்சி காய்ச்சி...அரும்மையா நோன்பு திறக்குறோம்...மாஷா அல்லாஹ்...
இஃப்தார் அரேஞ்மெண்ட்
இந்த நேரத்துல,அவங்களுக்கு எனது நன்றியையும்,அவங்க குடும்பத்துக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் வழங்க பிராத்திக்கிறேன்...

அப்பாட ஒருவழியா சகோ ஆமினா அழைத்த தொடர் பதிவையும் இத வச்சு சமாளிச்சுரலாம்ன்னு நெனைக்கிறேன்..பாப்போம் அக்கா என்ன சொல்ராகன்னு....

மற்றும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும்..இனிய ரமலான் வாழ்த்துக்களை மனமாற தெரிவித்தவனாக விடைபெருகிறேன்.


அன்புடன் ரஜின்