Saturday, September 24, 2011

சிந்தனை செய்வீர் ! சிரம் பணிவீர்,ஏக இறைவனுக்கு!!



கேப் கேனவரல் (அமெரிக்கா), செப்.24: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை அதிகாலை பூமி மீது மோதியது; ஆனால் பூமியின் எந்தப் பகுதியில் இது மோதியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.




 சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்காக யுஏஆர்எஸ் எனப்படும் செயற்கைக்கோள் நாசா நிறுவனம் 1991-ல் விண்ணுக்கு அனுப்பியது. இது 6 டன் எடையுடையது. 2005-ல் செயற்கைகோள் செயலிழந்ததால், செயற்கைக்கோளுடனான தொடர்பை நாசா துண்டித்தது. இதையடுத்து இந்த செயற்கைகோள், புவிவட்டப் பாதையிலிருந்து கீழே இறக்கப்பட்டு மற்றொரு வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது.


 இந்த நிலையில் இந்த செயற்கைக்கோள் பூமி மீது மோதும் அபாயம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த செயற்கைக்கோளின் சில பகுதிகள் பூமி மீது மோதியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




 ஆனால் பூமியின் எந்தப் பகுதி மீது செயற்கைக்கோள் மோதியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதுதொடர்பான ஆய்வில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செயற்கைக்கோள் மோதியதால் யாரும் காயமடையவில்லை என நாசாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமணி 


22:65(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம்விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.


3:83அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.




7:54நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் 

No comments: