Sunday, February 19, 2012

அரபி பயிற்றுவிக்க பெண் ஆசிரியைகள் தேவை..


முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீயில் அரபி வகுப்புகளுக்கான ஆசிரியைகள் தேர்வு நடைபெருகிறது . இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலிருந்தும் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை அரபி பாடங்கள் நடத்தவும், அரபி படிக்க எழுத பேசத்தெரிந்த பட்டப்படிப்பு படித்த முஸ்லிம் பெண் ஆசிரியைகள் தேவை. விருப்பமுள்ளவர்கள் முழுவிபரம் மற்றும் தொலைபேசி எண்களோடு கீழ்காணும் ஈமெயில் முகவரியில் தொடர்புக்கொள்ளவும்.
 
சகோதரி மலிக்கா, fmalikka@hotmail.com

Saturday, February 18, 2012

சொர்க்கம் போகலாமா? கிராமவாசியின் ஆசை !


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்" என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்" என்றார்கள். 


நபிகள் நாயகம் ஸல் அவர்களின் நன் மொழி ஸஹிஹ் அல் புஹாரி 1397